``கடனை அடைத்தும் அடங்காத பணவெறி'' ஏறி இறங்கிய டிராக்டர்- சிதறிய மனைவி உடல் -குலைநடுங்கிய திருவாரூர்

Update: 2024-09-30 14:09 GMT

திருவாரூர் மாவட்டம் சோனாபேட்டை கிராமத்தை சேர்ந்த தம்பதி சிவாஜி இந்திராணி தம்பதி. கடந்த ஆறு மாதத்திற்கு சிவாஜி குடும்பத்தினர் அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவரிடம் ரூ 2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர்.

சிவாஜி வட்டியுடன் கடனை திருப்பி கொடுத்ததாக கூறப்படும் நிலையில், காந்தி கூடுதல் வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு

ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காந்தி

டிராக்டரை ஒட்டி சென்று சிவாஜி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த

கார் மீது ஏற்றி உடைத்து இருக்கிறார். தொடர்ந்து இந்த சத்தம் கேட்டு வீட்டு வெளியே ஒடி வந்து இந்திராணி காந்தியை சத்தம் போட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி டிராக்டரை இந்திராணி மீது ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காந்தியை தேடி வருகின்றனர். இதனிடையே இந்திராணி கொல்லப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்