குடியாத்தம் பயணிகள் நிழல் கூடத்தில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு கலை கல்லூரி எதிரே உள்ள பயணிகள் நிழல் கூடத்தில், கண்ணாடி விரியன் பாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.