`ஃபாஸ்ட் டேக்கில் நோ பேலன்ஸ்' - நிறுத்தப்பட்ட அரசு பேருந்து.. கொந்தளித்த பயணிகள்
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட அரசு பேருந்து, ஃபாஸ்ட் டேக்கில் போதிய போலன்ஸ் இல்லை எனக்கூறி சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கசாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 20 நிமிடத்திற்கு பிறகு, முறையாக ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தி செல்ல அனுமதித்தனர். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.