அந்தமானில் குலுங்கிய பூமி தட்டு.. அருணாச்சலப் பிரதேசம் வரை பரவிய அதிர்வு

Update: 2025-03-24 09:03 GMT

ஆசிய கண்டத்தின் இரண்டு வெவ்வேறு பிராந்தியங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்திலும், அந்தமான் கடல் பகுதியிலும் உணரப்பட்டது. திபெத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 5 என்ற அளவிலும், அந்தமான் கடல் பகுதியில் 4 புள்ளி 9 என்ற அளவிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச எல்லையிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்