புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், ஆயில் மில் மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சாகுல் என்பவருக்கு சொந்தமான இந்த ஆயில் மில்லில், அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.