சென்னை திருவொற்றியூரில் தனியார் உணவகத்தில் ஆன்லைன் ஆப் மூலமாக வாங்கிய பிரியாணி சரியாக வேகாமலும், சாக்லேட் கேக் பூஞ்சை பூத்த நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உணவு ஆர்டர் செய்த சதீஷ் என்பவர் உணவகத்தின் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் அசால்டாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ்
திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.