ஏழு போலீசாரின் கைகால்களை உடைத்த பிறகு தான் தாம் இந்த இடத்திற்கு வந்திருப்பதாக உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராகவும், நிஷாத் கட்சியின் தலைவராகவும் இருக்கும் சஞ்சய் நிஷாத், காவல்துறையினர் தங்களது சமூகத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து குறி வைப்பதாக எச்சரித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.