68 உயிர்களை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கோரம்... ``அடுத்த வாரம்..'' வெளியான முக்கிய செய்தி

Update: 2024-08-27 17:35 GMT

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இரண்டாம் கட்ட விசாரணையை ஒரு நபர் ஆணையம் நடத்தி முடித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 24 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விஷச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் குணமடைந்தவர்களின் குடும்பங்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் 20 பேரிடமும் , இரண்டாம் கட்ட விசாரணையில் 20 பேர் என மொத்தமாக 40 பேரிடம் நடத்தி முடித்துள்ளனர். அடுத்த வாரம் நடக்க உள்ள மூன்றாம் கட்ட விசாரணையில் மீதமுள்ள 28 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக ஆணைய தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்