கொடூரமாக சிதைக்கப்பட்ட கொல்கத்தா பெண் டாக்டர் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-09-09 16:54 GMT

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், புலன் விசாரணை குறித்த புதிய நிலை அறிக்கையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தாக்கல் செய்த நிலை அறிக்கையை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், புலன் விசாரணை தொடர்வதை கருத்தில் கொண்டு புதிய நிலை அறிக்கையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்