கடைக்கு வெளியே சென்ற சிறுவன்..சுத்துப்போட்ட வளர்ப்பு நாய்கள்..6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Update: 2024-10-09 16:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ராமாரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ஆறு வயது மகனான கவுசிக், கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இரண்டு நாய்கள், சிறுவன் கவுசிக்கை சுற்றி வளைத்து கடித்துக் குதறியுள்ளன. தலையில் படுகாயம் அடைந்த நிலையில், பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு, திருவொற்றியூரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்