``சர்வாதிகாரத்திற்கு சரியான அடி கொடுத்த உச்ச நீதிமன்றம்'' - பொங்கிய மணீஷ் சிசோடியா

Update: 2024-08-10 04:44 GMT

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 2023 பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

17 மாதங்களாக திகார் சிறையில் இருந்தவர் ஜாமீன் வழங்கப்பட்டதும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அப்போது பேசிய சிசோடியா, மக்களின் அன்பு, கடவுளின் ஆசிர்வாதம், உண்மையின் சக்தியால் விடுதலையாகியிருப்பதாக நெகிழ்ந்தார். இந்திய அரசியலமைப்பை கொண்டு சர்வாதிகாரத்திற்கு உச்சநீதிமன்றம் சரியான அடியை கொடுத்திருக்கிறது சர்வாதிகார அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைக்கும் போது அரசியலமைப்பு பாதுகாக்கும் அம்பேத்கர் கனவு நிறைவேறியிருக்கிறது; அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் சக்தியால் எனக்கு ஜாமீன் கிடைத்துள்ளது; அதே சக்தி கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிப்பதை உறுதி செய்யும் என்று சிசோடியா கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்