ரோட்டோரம் நின்றிருந்த லாரி... வேகமாக வந்து மோதி சிதறிய கார்... துடிதுடித்து அடங்கிய 3 உயிர்கள்

Update: 2024-10-26 07:17 GMT

ரோட்டோரம் நின்றிருந்த லாரி... வேகமாக வந்து மோதி சிதறிய கார்... துடிதுடித்து அடங்கிய 3 உயிர்கள்

அவிநாசியை அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் டீசல் தீர்ந்து போனதால் மணல் லாரி ஒன்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததுள்ளது. அப்போது, பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரில் பயணித்த மோனிஷ், அபர்ணா மற்றும் ஹேமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்பவதும், இருவரும் கல்லூரியில் படித்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூவரின் உடலும் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்