பஸ்ஸுக்கு காத்திருந்த கர்ப்பிணி பெண்.. திடீரென வந்த வலி.. அங்கேயே பிறந்த குழந்தை - அடுத்து நடந்த நெகிழ்ச்சி

Update: 2025-03-17 03:07 GMT

திருப்பூரில் பேருந்து நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு காவலர்களும் தூய்மை பணியாளர்களும் இணைந்து உதவி செய்தனர். மருத்துவமனைக்கு செல்வதற்காக சுமதி என்பவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து காவலர்களும் தூய்மைப் பணியாளர்களும் இணைந்து அந்த பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்