கடலூரில் உள்ள கெவின்கேர் நிறுவனத்தின் சி.கே இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே ரங்கநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார். சி.கே கல்வி குழும நிர்வாக இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன், சென்னை மவுண்ட் ரோடு பிலால் உணவு குழுமத்தின் நிறுவன தலைவர் அப்துல் ரஹீம், கல்லூரி முதல்வர் சரவணன், துணை முதல்வர் அருளாளன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர்.