சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மிகப்பெரிய பந்து போன்ற அந்த பொருளில் மாலத்தீவு என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் தெரிவதால் கடல் எல்லை பகுதிக்கு பயன்படுத்தப்படும் மிதவை பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.