குடிநீர் குழாயில் வரும் தலைபிரட்டை தவளைகள் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-10-19 15:58 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 6-வது வார்டு பொம்மனம்பட்டியில், குடிநீர் வழங்கும் காவிரி கூட்டுக்குடிநீரில் கடந்த ஒரு வாரமாக கலங்கிய நிலையில் குடிநீர் வருகிறது. அதனுடன், தலைபிரட்டை தவளைகளும் வருவதால் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிலருக்கு ஒவ்வாமையால் வயிற்றுபோக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்