`ஆபாச வீடியோ வழக்கு' - சிறையில் போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணன் - வெளியே பகீர் கிளப்பிய தம்பி

Update: 2024-06-18 14:31 GMT

மயிலாடுதுறையை சேர்ந்தவர் கில்லி பிரகாஷ். மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ள இவர், அரசு ஊழியர் ஒருவரை, ஆபாச வீடியோ வைத்து மிரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறைக்குள் வைத்து கில்லி பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், கில்லி பிரகாஷை மீட்ட சிறை அதிகரிகள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், கில்லி பிரகாஷை காண மருத்துவமனைக்கு வந்த அவரது தம்பி முரளி, தன் அண்ணனின் நிலைக்கு போலீசார்தான் காரணம் எனக்கூறி தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அண்ணனை பார்க்க அனுமதி மறுத்ததால், மருத்துவமனை வளாகத்தில் வைத்தே அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை உறவினர்கள் மீட்டு சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்