இந்தியாவிலே முதல் முறையாக "வெளிநாட்டு சுற்றுலா..நம்பவே முடியவில்லை" பிரான்ஸ் பறந்த தமிழக ஆசிரியர்கள்

Update: 2024-10-23 12:32 GMT

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது 54 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கல்வி சுற்றுலாவாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்கான சென்னை விமானநிலையம் வந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் குழுவினர், முதல்வர் ஸ்டாலின், பள்ளிகல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவதாக பெருமையாக கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்