தமிழ்நாடு கையில் இயற்கை கொடுத்த பாயிண்ட்.. கர்நாடகாவுக்கு காத்திருக்கும் சம்பவம்

Update: 2024-07-24 06:40 GMT

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுவை மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை பெய்து, அணைகள் நிரம்பியதை சுட்டிக்காட்டி தமிழக அரசு வாதங்களை முன் வைக்கவுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்