சுயமரியாதை திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் - தமிழச்சி தங்க பாண்டியன் வலியுறுத்தல்

நாடு முழுவதும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டுமென திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்

Update: 2022-03-24 20:48 GMT
நாடு முழுவதும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டுமென திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.  மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், சமஸ்கிருத மொழியில் நடைபெற்று வந்த இந்து திருமண சட்டத்திற்கு எதிராக 50 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை திருமணத்தை பெரியார் பரிந்துரைத்ததாக தெரிவித்தார். முதல் மாநிலமாக தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்த தமிழச்சி தங்க பாண்டியன், நமிதா திருமண அமைப்பின் கீழ் சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். .
Tags:    

மேலும் செய்திகள்