நில தகராறு..! போராடிய பெண்ணை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற பழைய உரிமையாளர்.. நடுங்க வைக்கும் காட்சி

Update: 2024-09-30 13:37 GMT

பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள், தனது வீட்டை புதுப்பிக்கும் பணியை தொடங்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர் பால்ராஜ் கட்டிட இடிபாடுகளை அகற்ற வலியுறுத்தி அந்த பெண்ணிடம் சண்டையிட்டனர். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த நிலத்தின் பழைய உரிமையாளர், பெண் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பால்ராஜ், பெருமாள்சாமி, ஈஸ்வரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்