இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-30 13:57 GMT

அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் அக்டோபர் 4ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..

விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கக் கோரியதை, ஏற்க மறுப்பு..

நிபந்தனை அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது...

முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுப்பதால் நிபந்தனைகளை கடைப்பிடிப்பாரா? என்று ஈ.பி.எஸ். கேள்வி...

உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியன், சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு...

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக நாசர் பதவியேற்பு...

கோப்புகளில் கையெழுத்திட்டு, பணிகளை தொடங்கினார்...

Tags:    

மேலும் செய்திகள்