22 சவரன்.. 5 லட்சம் பணம்.. வீட்டில் சாவகாசமாக திருடிய திருடன்.. வெளியான பரபரப்பு காட்சிகள்..

Update: 2024-09-30 14:58 GMT

கோவை ஆலாந்துறை அருகே வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையன் சாவகாசமாக கொள்ளையடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா, வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய போது பீரோவில் இருந்த 22 சவரன் நகை, சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்த போது கொள்ளையன் அடையாளத்தை மறைக்க மங்கி குல்லா, கை உறைகளை அணிந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. புகாரின் பேரில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்