2வது டி20 - 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Update: 2024-10-09 22:39 GMT
  • வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரையும் கைப்பற்றியது.
  • டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பவுலிங் தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சாம்சன் 10 ரன்களுக்கும், அபிஷேக் சர்மா 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கு கேட்ச் ஆனார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ரெட்டி-ரிங்கு சிங் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரி மழை பொழிந்தது. 7 சிக்சர்களைப் பறக்கவிட்ட நிதிஷ் ரெட்டி 74 ரன்களும் ரிங்கு சிங் 53 ரன்களும் எடுத்தனர். பாண்டியா 32 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.
Tags:    

மேலும் செய்திகள்