இறக்கும் முன் முரசொலி செல்வம் உதிர்த்த வார்த்தைகள்.. இதனால் தான் CMஸ்டாலின்,உதயநிதி கதறி அழுதார்களா?

Update: 2024-10-11 10:16 GMT

முரசொலி நாளிதழுக்கு மறைந்த முரசொலி செல்வம் நள்ளிரவில் கடைசியாக தன் கைப்பட "ஒரு கேள்வி ஒரு பதில்" என்ற பெட்டிச் செய்தியை எழுதி அனுப்பியுள்ளார்... என்ன செய்தி அது என்பதை இப்போது பார்க்கலாம்...

அரசு நிகழ்ச்சிகளுக்கு திமுக சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டு மரபு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முரசொலி செல்வம் பின்வரும் பதிலை எழுதியுள்ளார்...

கருப்பு, வெள்ளை, சிகப்பு பார்டர் பொறித்த கட்சி சின்ன கரை வேட்டிகளை அணிந்து அவருடைய கட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை முதலமைச்சர்களாக பல அரசு விழாக்களில் கலந்து கொண்டதும் மரபு மீறலா? என்றும்,

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவி உடையிலேயே ஒரு முதலமைச்சர் உலா வருகிறாரே? அது எத்தகைய செயல்? விளக்குவாரா ஜெயக்குமார்? என்று அதில் கேள்விகளை எழுப்பியுள்ளார்...

முரசொலி செல்வம் எழுதிய இந்த செய்தி நேற்றைய முரசொலியில் 3ம் பக்கம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்