புதுவையில் வலுத்த எதிர்ப்பு - சி.பி.ராதாகிருஷ்ணன் போட்ட உத்தரவு

Update: 2024-07-02 02:51 GMT

தொடர் புகார் எதிரொலியாக புதுச்சேரி சென்டாக் கன்வீனர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசின் பரிந்துரையை ஏற்று, சென்டாக் கன்வீனராக ராஜீவ்காந்தி கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பாலாஜி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மூத்த பேராசிரியர்கள், தகுதியானவர்கள் பலர் இருந்தும் பாலாஜியை நியமிப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என புகார் அளித்திருந்தனர். இதையேற்று, சென்டாக் கன்வீனர் பொறுப்பில் இருந்து பாலாஜி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, கஸ்தூரிபா மகளிர் கல்லூரி முதல்வர் ஷெரில் ஆன் சிவனை நியமித்து துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்