அதிவேகமாக பரவும் வைரஸ்.. தப்பிக்க வழி உண்டா..? - உஷார் மக்களே.. பறந்த எச்சரிக்கை

Update: 2024-07-03 15:03 GMT

மகாராஷ்டிரா மாநிலம் புனே, கோல்காபூர், அகமத்நகரில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு வைரஸ் தொற்று பரிசோனையை மேற்கொள்ளவும், ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் தாய்மார்களின் கரு வளர்ச்சியை கண்காணிக்கவும் மாநில அரசுக்களை அறிவுறுத்தியிருக்கிறது. சுகாதார மையங்கள், மருத்துவமனை வளாகங்களில் ஏடிஸ் கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்க கண்காணிப்பை மேற்கொள்ள நோடல் அதிகாரிகளை நியமிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், நிறுவனங்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்