121 உயிர்கள் சாக காரணமான சாமியார் பாபாவின் பெயர் FIR-ல் கூட ஏறவில்லை.. நாட்டையே கொதிக்கவிட்ட தகவல்

Update: 2024-07-03 10:04 GMT

ஹத்ராஸ் பகுதியில், சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ், நிகழ்ச்சி அமைப்பாளர்கள்​ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத‌ வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சாமியார் தலைமறைவான நிலையில், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்ட நிலையில், இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக‌ தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி முடிந்து சாமியார் வெளியேறிய போது, அவர் நடந்து சென்ற பாதையில் மண்ணை எடுக்க ஏராளமானோர் முற்பட்டனர். அப்போது நெரிசல் ஏற்பட்டதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் நிபுணர் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்