முன்னாள் முதல்வர் சிலைக்கு தீ வைப்பு.. ஆந்திராவில் அதிர்ச்சி

Update: 2024-06-30 05:54 GMT

முன்னாள் முதல்வர் சிலைக்கு தீ வைப்பு.. ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் பட்டிப்ரோலு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். பெட்ரோல் ஊற்றப்பட்டதால் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், சிலை முழுவதும் சேதமடைந்தது. இதற்கு பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலையருகே போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்