எதிர்பாரா நேரத்தில் விஜய் மல்லையாவுக்கு ஷாக்... இறங்கி அடித்த சிபிஐ கோர்ட்

Update: 2024-07-02 05:28 GMT

வங்கிக்கடனை திரும்பச் செலுத்தாத வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது. கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டுவரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சுமார் 180 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. கடனை திரும்பச் செலுத்தவில்லை என விஜய் மல்லையா உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்து, கடந்த 2016ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்