திருச்சி விமான நிலையத்தில் 38.08 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் இருந்து சார்ஜா செல்ல முயன்ற இரு பயணிகள் தங்கள் உடைமைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்ற நிலையில், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணையானது நடைபெற்றது.