செல்போனை சார்ஜ் போட்ட சிறுமி - துடிதுடித்து பலியான சோகம்.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-03-23 13:22 GMT

சென்னை எர்ணாவூரில் ஈரக்கையுடன் செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார். முகுந்தன் என்பவரின் மூத்த மகள் அனிதா, வீட்டில் ஈரக்கையுடன் செல்போனில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்