"யார பாத்து கேள்வி கேக்குற.." அரிவாளுடன் வீடு தேடி சென்று.. பகீர் வீடியோ.. திடுக் பின்னணி

Update: 2024-10-11 03:36 GMT

வேலூர் அருகே கிராமசபா கூட்டத்தில் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவரின் வீடு தேடிச்சென்று, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், அரிவாளுடன் தகராறில் ஈடுபடும் வீடியோ பரவி வருகிறது. செட்டிகுப்பம் ஊராட்சியில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவிடம் அடிப்படை வசதி செய்துதரவில்லை என்று ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், கேள்வி கேட்டவரின் வீட்டிற்கு அரிவாளோடு சென்று, மிரட்டியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்