திருச்செந்தூர் கோயிலில் பொது தரிசன வரிசையில் திடீர் பரபரப்பு - பார்த்து அதிர்ச்சியான பக்தர்கள்

Update: 2024-09-17 09:35 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பொது தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், வள்ளிக்குகை பகுதியில் உள்ள பொது தரிசன பாதையில், வரிசையில் நின்ற பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பக்தர்கள் சமாதானம் செய்த நிலையில், அந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்