அரசு பஸ்ஸுக்குள் அட்டூழியம்.. பதறவைக்கும் பள்ளி மாணவியின் வார்த்தைகள்அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-19 03:17 GMT

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார் கூறி அரசு பேருந்தை கிராம மக்கள் 3 மணி நேரம் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து கண்ணம்பாக்கம் வரை செல்லக்கூடிய 113 கிராஸ் பேருந்து, கும்புளி அருகே சென்றபோது அங்கு மறைந்திருந்த மாற்று சமூகத்தினர் சிலர் பேருந்தில் ஏறி ஏடூர் கிராம பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை தாக்கியதாகவும், அதை தட்டி கேட்ட சில மாணவிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்து ஓட்டுனர் சம்பவம் நடந்த இடத்திலேயே பேருந்தை நிறுத்திய நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற ஏடூர் கிராம மக்கள், பேருந்தை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்