``டேய் என் மேல எத்தன கேஸ் இருக்கு தெரியுமா?’’ - ரவுடி என நிரூபிக்க நபர் செய்த பயங்கரம்

Update: 2024-09-19 04:43 GMT

சிவகாசி நேரு சாலையில் உள்ள அசைவ ஹோட்டலுக்கு சாப்பிட வந்த சிலர், மதுபோதையில், அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் திரும்பி வந்த அவர்கள், உணவகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஹோட்டல் உரிமையாளர் மைதீன் பிச்சை, அவரது மகன் ரஹ்மத்ஆலம் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடி உள்ளனர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்