"என் பிள்ளை போன்று வேறு யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது" - "சாலை எது, குழி எது என்று தெரியா நிலை"

Update: 2024-10-27 03:03 GMT

"என் பிள்ளை போன்று வேறு யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது" - "சாலை எது, குழி எது என்று தெரியா நிலை" - பாதாள குழியில் விழுந்து இளைஞர் பலி

திருப்பூரில் மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அணைப்பாளையம் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில், மழை நீர் தேங்கி குட்டை போல காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வரும் மாரியப்பன் என்பவர், குட்டையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை ஏடுக்க முயன்றபோது குழியில் விழுந்து இறந்துள்ளார். அவரது உடல் மிதப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்