தட்டி கேட்டவர் வீட்டில் பாய்ந்த பெட்ரோல் குண்டு - வெளியான திடுக் பின்னணி

Update: 2024-06-24 14:18 GMT

போரூர் அடுத்த காரம்பாக்கம் பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தன் நண்பனான காராம்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் சேர்ந்து வீட்டருகே அமர்ந்து மது அருந்தியிருக்கிறார். இதனைக் கண்ட பாலாஜியின் சகோதரர் கவியரசு, இருவரையும் எச்சரித்த நிலையில், தன் தம்பியான பாலாஜியை கண்டித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆத்திரத்தில் இருந்த முருகன், நள்ளிரவில் வந்து கவியரசின் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்