வீட்டு சாப்பாட்டை பள்ளியில் சாப்பிட்ட மாணவன் துடிதுடித்து பலி

Update: 2024-07-02 06:08 GMT

செங்கோட்டையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த‌தற்கு அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை காமாட்சி தெருவை சேர்ந்த செல்வகுமார் ஜெயலட்சுமி தம்பதியின் 8 வயது மகன் அசோக் குமார். அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அசோக் குமார், வீட்டில் இருந்து கொண்டு சென்ற சாப்பாட்டை மதியம் பள்ளியில் வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளான். ஆனால், செங்கோட்டை அரசு மருத்துவர்களின் அலட்சியமே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்