25 ஆண்டாக பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்த எளிய மக்கள் - சுற்றிவளைக்கப்பட்ட கலெக்டர் ஆபிஸ்

Update: 2024-07-04 07:00 GMT

25 ஆண்டாக பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்த எளிய மக்கள் - சுற்றிவளைக்கப்பட்ட கலெக்டர் ஆபிஸ்

இருளர் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள், அடையாள அட்டைகளைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட எடகீழையூர் வடக்கு உடையார் தெருவில் வசித்து வரும் 35 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இருளர் ஜாதி சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும், ஆனால் தங்களுக்கு இருளர் ஜாதி சான்றிதழ் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்