தமிழ் மண்ணின் கற்பக தரு பனையை இரவோடு இரவாக வெட்டிய மர்ம நபர்கள்.. தனியாருக்காக நடந்த பேரதிர்ச்சி

Update: 2024-07-04 06:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த பூதூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் தனியாருக்கு வழி ஏற்படுத்துவதற்காக இரவோடு இரவாக வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பனை மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

அவர், பனை மரங்களை வெட்டியவர்கள் மீது அரசு

கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

-

Tags:    

மேலும் செய்திகள்