மாணவிகளை குறிவைத்தும் வரும் போன் கால்.. அட்டென்ட் செய்யாதீங்க.. பேராபத்து காத்திருக்கு

Update: 2024-07-04 08:14 GMT

மாணவிகளை குறிவைத்தும் வரும் போன் கால்.. அட்டென்ட் செய்யாதீங்க.. பேராபத்து காத்திருக்கு

புதுக்கோட்டையில் ஸ்காலர்ஷிப் வழங்குவதாக கூறி மாணவர்களை குறி வைத்து மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பள்ளி கல்வித்துறை சார்பில் பேசுவதாக கூறி வரும் அழைப்பு மூலம் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு அரசு சார்பில் ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக கூறி அவர்களுடைய வங்கி கணக்கு எண்களை பெறும் மர்ம கும்பல், வங்கி கணக்கு எண்களை அனுப்பி வைக்க கூறி, அதற்கான otp எண்களை பெற்றுக்கொண்டு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேர் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்