மதுரையில் உருவாகும் சைத்தான்கள்..சும்மா சென்றவர் பின்னாலே வெட்டு - தூங்காநகரை அதிரவிட்ட பகீர் காட்சி

Update: 2024-07-04 06:50 GMT

மதுரையில் உருவாகும் சைத்தான்கள்..சும்மா சென்றவர் பின்னாலே வெட்டு - தூங்காநகரை அதிரவிட்ட பகீர் காட்சி

மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த போதை கும்பல், அங்கிருந்த பொதுமக்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி சாலை பகுதியில் உள்ள தெருவில் 4 இளைஞர்கள் போதையில் வலம் வந்தனர். அப்போது, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபரை அரிவாளால் வெட்டி விட்டு சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குபதிந்த போலீசார் ஒருவரை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்