அம்மாவின் சொத்தை மாற்ற சென்ற 3 மகள்களுக்கு பேரதிர்ச்சி... "துணை தாசில்தார் செய்த சம்பவம்"

Update: 2024-07-04 08:10 GMT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், இறந்தவர் பெயருக்கு பட்டா வழங்கிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. விளாத்திகுளம் தாலுகா, வெவ்வால் தொத்தி கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது பெயரில் ஒரு ஏக்கர் 81 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அழகம்மாள் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகள்கள் மூன்று பேரும் தங்களது பெயர்களில் பட்டா வழங்க வேண்டும் என விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில், பட்டாவானது, மீண்டும் இறந்துபோன அழகம்மாள் பெயரிலேயே வந்தடைந்தது. இதனால், மூன்று மகள்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் விளாத்திகுளம் துணை தாசில்தார் சங்கர நாராயணன், வேண்டும் என்றே இவ்வாறு செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்