நடு ரோட்டில் துடிக்க துடிக்க வெட்ட பட்ட விசிக பிரமுகர் - மயிலாடுதுறையை பதற விட்ட சம்பவம்

Update: 2024-07-04 07:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் ராஜேஷ், விபத்தில் ஒரு காலினை இழந்த நிலையில், செயற்கை கால் பொருத்தப்பட்டது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இருந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனியாக வீடு திரும்பியபோது, மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில், அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து நிறுத்தி, அரிவாளால் வெட்டினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் வி.சி.க.வினர், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாகையில் இருந்து மோப்பநாயை வரவழைத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்