வாத்தியாரை வழிமறித்து கொலைவெறி தாக்குதல் - பெற்றோர்கள் அதிர்ச்சி

Update: 2024-10-09 09:39 GMT

சின்னசேலம் அருகே பெருமங்கலம் கிராமத்தில் இயங்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில், மாலையில் சிறப்பு வகுப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், மலர் உட்பட மூன்று பேர் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பு வகுப்பு நடத்தப்படாது என தலைமை ஆசிரியர் சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள், முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், பள்ளி முடிந்து அவ்வழியே மனைவியுடன் வந்த பகுதி நேர ஆசிரியர் மனோகர் என்பவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மனோகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, பள்ளிக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தியபோது முருகனை கைது செய்யக்கோரி பெற்றோர் முற்றுகையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்