SSLC டூ MBBS.. அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த டாக்டர்

Update: 2024-10-26 09:18 GMT

SSLC டூ MBBS.. அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த டாக்டர்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு மலைக் கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் தாலுகா பருவதன அள்ளி கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து என்பவர், அஞ்செட்டி தாலுகாவில் உள்ள கோட்டையூர் மலைக்கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவர், மலைக்கிராம மக்களை ஏமாற்றி அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் முதல்வரின் தனி பிரிவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில், தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையிலான குழுவினர், அங்கமுத்துவின் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தியபோது, அவர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மருத்துவ குழுவினர், அஞ்செட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்ததை அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடைய கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்