ஆர்.எஸ்.எஸ் பேரணி..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | RSS | TN Govt

Update: 2024-09-20 15:08 GMT

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்கள் மீது, வரும் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் சார்பாக 58 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்த மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, தமிழக அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது வரும் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்