நீட் மாணவர்கள் பிரம்பால் தாக்கப்பட்ட சம்பவம்..! ஆட்சியருக்கு பறந்த முக்கிய கடிதம் | Nellai

Update: 2024-10-22 02:28 GMT

நீட் பயிற்சி மையத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்பப்பட்டுள்ளதாக, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில்,

மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில்,

ஜல் நீட் அகாடமியில் படித்த மாணவனின் தாயார் வினோதினி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த தனது மகனை சித்திரவதை செய்வது போன்று சித்தரித்து காட்சிகள் பகிரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனது மகன் தற்போதும் அங்கு தொடர்ந்து படித்து வருகிறார் என்றும், எங்களுக்கு அங்கு நடந்த சம்பவம் குறித்த அனைத்து தகவல்களும் தெரியும் என கூறியுள்ளார். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது நீட் அகாடமி தொடர்ந்து செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று மாணவி ஒருவரும் நீட் அகாடமியில் எந்த தவறும் இல்லை என கூறி ஆட்சியருக்கு கடிதம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்