மதுரையை உலுக்கிய 2 பெண்களின் கோர மரணம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

Update: 2024-10-22 04:03 GMT

மதுரை திருமங்கலம் அருகே விபத்தில், 2 பெண் தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த‌தால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக உள்ள விமான நிலைய சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலைத்தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி ஏறி இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் சாலையை சீரமைக்காத‌தே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி ஆணையர் 4 நாட்களுக்குள் சாலை அமைப்பதாக உத்தரவாதம் அளித்த‌தால் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்